email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

மேலும்விபரங்களுக்கு

பன்னிரு திருமுறை
பாட்டும் பொருளும்

பஞ்சபுராணம்

பஞ்சபுராணத்தொகுப்பு

நன்றி. சைவ மன்றம், சிட்னி


தேவாரங்கள் → தங்கிலிஸில்

அறிமுகம்

எமது இளம் சந்ததியினர் கோவிலுக்கு நாளாந்தம் வருவது மிகவும் குறைந்துள்ளது. பெயர்பெற்ற கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனபது முதுமொழி. இப்போது ஊரில் கோவில்கள் பல இருந்தும் அதை பாவித்து பயன் பெறும் மக்கள் குறைந்து வருவதை கண்கூடாக காணக்கூடயதாக இருக்கின்றது.

இன்நிலையில் வெளிநாடுகளில் குடியேறிய எமது உறவுகளின் பிள்ளைகளின் சமய ஈடுபாடு அருகி வருகிறது. வீட்டில் பெற்றோர்கள் பஞ்சபுராணம் பாடி சுவாமி வழிபடும் பொழுது சிறுவர்கள் அருகில் அமைதியாக இருப்பார்கள். அவர்களில் சிலர் தமிழ் படித்துக் கொண்டிருந்தாலும் தேவாரத்தை வாசித்து பாடும் அளவிற்க்கு தமிழ் பாண்டித்தியம் இல்லை. அச்சிறுவர்களுக்கு உதவுவதற்காக பஞ்ச புராணத்தை ஆங்கில எழுத்துகளில் எழுதி உள்ளோம்.
இதை TANGLISH என்று கூறுவர். இது ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமா பாடல்களை பிற பொழி பாடகர்கள் பாடும் பொழுது அவர்கள் தங்களுக்கு தெரிந்த மொழியில் எழுதித்தான் பாடுவார்கள்.

விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

திருமூலர் (திருமந்திரம்)               

aiNthu karaththanai aanai mukaththanai
inthin iLampiRai poalum eyiRRanai
NaNthi makanthanai nYaanakkozhuNthinai
puNthiyil vaiththadi poaRRukinRaenae

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

ஔவையார் (மூதுரை)               

vaakkunNdaam Nalla manamunNdaam maamalaraal
NOkkunNdaam maeniNudanGkaathu pookkonNdu
thuppaar thirumaeni thumbikkaiyaan
paatham thappaamal chaarvaar thamakku

தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

சம்பந்தர்          

THEVARAM
Thodudaiya seviyan vidai yeyrior thoovan mathi soodi
Kaadudaiya sudalaip podi poosiyen ullam kavar kalvan
Edudaiya malaraan munai natpaninth thetha arul seitha
Peedudaiya piramaapura meviya pemmaan ivan andreh

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

சம்பந்தர்          

pidiyathan uruvumai koLamiku kariyathu
vadi kodu thanathadi vaLipadu mavaridar
kadikanNa pathivara aruLinan mikukodai
vadivinar payilvali valamurai yiRaiye

தேவாரம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

சம்பந்தர்          

Waiyeru tholipangan vidamunnda kanndan
Mihanalla veenai thadavi
Massaru thinggal ganggai mudimael anindhen
Vulame puhuntna athanaal
Nyaaiyiru thinggal sewaaii putham viyaalan
Velli sani paambirandum undane
Asaru nalla nalla avai nalla nalla
Adiyar avarku migavae

தேவாரம்
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே

சம்பந்தர்          

Manthira maavathu neeru
Vaanavar melathu neeru
Sunthara maavathu neeru
Thuthikap paduvathu neeru
Thanthira maavathu neeru
Samayathil ullathu neeru
Senthuvar vaayumai pangan
Thiru aalavaayaan thiruneereh.

தேவாரம்
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே

அப்பர்          

Kuutraayina vaaru vilakkahiliir
Kodumaipala Seithnna naan arriyaen
Aetraai adikae iravum pahalum
Piriyaadhu Vananguvan eppozhuthum
Thoatrraa thenvavitrrin agham padiyae
Kudaroddu thudakki mudakkiyida
Aatraen adiyaen adhighaik kedila
Veerattaanatth thurai ammaanae

தேவாரம்
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே

அப்பர்          

Sotrunai Vaethiyan
Sothi Vaanavan
Potrunaith Thirunthadi
Porunthak Kaitholak
Katrunai Pootiyohr
Kadalit Paaichinum
Natrunai Yaavathu
Namachivaayavay.

தேவாரம்
எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

அப்பர்          

Ella ulahamum aanai neeyae
Ehambam mevi irunthai neeyae
Nallarai nanmai arivai neeyae
Gnanchuday vilalakaa nirai neeyae
Polla vinaikal aruppaai neeyae
Puhalchayvadi enmeil vaithai neeyae
Sevaaya Selvam tharuvai neeyai
Thiruvaiyar ahalaatha sempot sohthi

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்துறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே

சுந்தரர்     

பித்தனே, பிறைச்சந்திரனை சூடுபவனே, பெருமானே, அருளோடு ஆள்பவனே
அடியேன் மறவாது நினைக்கின்றேன் மனதில் உன்னை
பெண்ணை நதியின் தெற்கே திருவெண்ணை நல்லூர் துறையில் உள்ளவனே
நான் உனக்கு அடிமையாயினேன் இல்லை எனறு சொல்லலாமோ

திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

மாணிக்கவாசகர்          

தாயே! தந்தையே! உவமை கூறமுடியாதல மணி போன்றவனே!
அன்பினால் உண்டாகும் தெவிட்டாத அமுதமே!
பொய்யாய் காலத்தை வீணாக்கும்
புழுவைவிட கேவலமான எனக்கு
மிகவும் சிறப்பு மிக்க சிவபதத்தை அழித்த
செல்வமே! சிவபெருமானே!
இப்பிறவியில் உன்னை இறுகப் பற்றிக்கொண்டு விட்டேன்
உன்னால் எங்கு போக முடியும்?

மாணிக்கவாசகர்          

திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

மாணிக்கவாசகர்          

Paalninain thootum thaayinoom saalap
Parinthunee paaviyaanudaiya
Ooninai urukki ulloli perukki
Ulapilla aananthamaanae
Thaeninaich sorinthu puram puram thirintha
Selvamae sivaperumaanae
Yaan unnaith thodarnthi chikkanap piddithaen
Engkaluu tharuluva thaniyae

திருவாசகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை
யாய்என்னைக் கண்டுகொள்ளே.

மாணிக்கவாசகர்          

Meithaan arumbi vithir vithirth
Thuvirai yaarkalarkku en
Kaithaan thalivaiththuk kannir
Thathumbi vethumbi ullam
Poythaan thavirnththu unnaip Pohtri
Saya saya pohtri" ennum
Kaithaan nekila vidaen Udai
Yai ennaik kandu kollae

தேவாரம்

          

திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
        உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
        சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
        அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
        தொண்டனேன் விளம்புமா விளம்பே

திருமாளிகைத்தேவர்     

நல்ல ஒளிவீசும் விளக்கே அழிவற்ற ஒரு பொருளே
சாதாரண உணர்வால் அறியமுடியாத உணர்வே
தெளிவான பளிங்கு விடும் ஒளிக்கதிர்கள் சேர்ந்து உருவான மணிக்குன்றே
அறிவில் (மூளைக்குள்) தேனாய் இனிப்பவனே
அன்பு பெருகும் மனதில் ஆனந்தத்தை தரும் கனியே
தில்லை அம்பலத்தை நடனம் செய்யும் அரங்காக கொண்டு
நீ ஆடும் தெய்வ திருநடனத்தை
தொண்டனாகிய நான் எப்படி சொல்வதென்று எனக்கு சொல்வாயாக

திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே

சேத்தனார்     

பால் வேண்டும் என்ற குழந்தைக்கு (புலி்ப்பாத முனிவின் மகன் உபமன்யு)
      பாற்கடலையே கொடுத்த சிவபெருமான்
திருமாலுக்கு (சுதர்சனம் என்ற) சக்கராயுதத்தை கொடுத்து அருள்புரிந்தவன்
      நிலையான தில்லையில் உள்ள
ஆன்றோர்கள் வாழ்கின்ற பொன்னம்பலத்தை இடமாக
கொண்டு நடனம் செய்யும் அருள் புரிபவனுக்கு நாம் பல்லாண்டு வாழ்க
     என கூறுவோம்

பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

சேக்கிழார்     

உலகம் யாவற்றையும் உணர்ந்து அதை விளக்குவதற்கு அருமையாக இருப்பவனும்
நிலவொளியையும் கங்கை நீரும் நிறைந்திருக்கும் சடையுடையவனும்
அளவிட முடியாத ஒளிமயமானவனும் பொன்னம்பலத்தில் ஆடும் இறைவனின்
மலர் போன்றதும் சிலம்பொலி ஒலிக்கின்ற திருவடியை வாழ்த்தி வணங்குவோம்

திருப்புகழ்
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே

அருணகிரிநாதர்     

மயில் மீது ஏறி விளையாடி வரும் ஒரு முகம்
சிவனுடன் ஞானத்தை பேசும் ஒரு முகம்
அடியவர்கள் கூறும் துன்பங்களை நீக்கும ஒரு முகம்
கிரவுஞ்சமலையை துளைக்க வேலை ஓங்கி நின்ற ஒரு முகம்
விரோதம் கொண்ட சூரனை கொன்ற ஒரு முகம்
வள்ளியை திருமணம் செய்ய வந்த ஒரு முகம்
இவ்வாறு ஆறு முகமாய் நின்றதன் விளக்கத்தை நீ சொல்லி அருள வேண்டும்
ஆதியாய்யுள்ள அருணாசலத்தில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானே

சரஸ்வதி பாடல்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தி லிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்

பாரதியார்     

வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் சரஸ்வதி
வீணையின் இசையில் இருப்பவள்
மிகுந்த இன்பம் தரும் கவதைகளை
இயற்றும் புலவர்களின் உள்ளத்தில் இருப்பாள்
வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து
சொல்பவர்களின் உள்ளத்தில் நின்று ஒளி தருவாள்
வஞ்சனை இல்லாத முனிவர்கள் கூறும்
கருணை நிறைந்த வார்த்தைகளின் உட்பொருளாக இருப்பாள்

வாழ்த்து (கந்தபுராணம்)
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்

கச்சியப்பசிவாச்சாரியார்     

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும்
வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன்
நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும்
உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும்
நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும்
தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும்
பெருமை மிக்க சைவ நீதி
உலகமெல்லாம் பரவ வேண்டும்

தென் நாடு உடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமப் பார்வதி பதையே
அரகர மகா தேவா

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க

திருச்சிற்றம்பலம்

தென் நாட்டை உரிமையாக கொண்ட சிவனே போற்றி
எந்த நாட்டில்வாழ்பவர்க்கும் இறைவனாக இருப்பவனே போற்றி

பார்வதியின் கணவன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
மறைகளின் (வேதங்களின்) தலைவனே

இன்பம் பரவி
எல்லாரும் வாழ வேண்டும்

 

மேல்  ⮝  TOP